22-ம் தேதி வரை கெடு விதித்த மத்திய அரசு…! டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்த ராகுல் காந்தி…!

டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்தார் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கில் மார்ச் 23-ம் தேதி தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் காலி செய்ய அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று அரசு இல்லத்தை காலி செய்தார்.

Vignesh

Next Post

சூடு பிடிக்கும் அரசியல்...! பா.ஜ.க-வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் துணை முதல்வர்...!

Sat Apr 15 , 2023
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி நேற்று காங்கிரஸில் இணைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடகாவின் கட்சிப் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்துப் பேசிய பிறகு லட்சுமண் சவடி கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மே பத்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. […]
images 2023 04 15T060353.916

You May Like