ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளி நெருங்கும் காவல்துறையினர்….! கைப்பற்றப்படுமா துருப்புச் சீட்டு….?

பல வருடங்களுக்கு முன்னர் திமுகவின் அமைச்சர் கே என் நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கை திருச்சி மாநகர காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.


அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வருடத்தில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை, அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் தற்போது வரையில் எந்த விதமான உண்மையை கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், 10 வருடத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.அதிலும் அமைச்சர் கே.என் நேரு தன்னுடைய சகோதரரை கொலை செய்த கும்பலுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நிறைவு பெற்றுள்ளது. அதன் அறிக்கை ஓரிரு வாரங்களில் திருச்சி ஜே எம் 6 நீதிமன்றத்தில் நீதிபதி சிவகுமார் முன்னிலையில் தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறி இருக்கின்றன.

இந்த நிலையில், 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை என்பது எல்லோரிடமும் பொதுவாக கேட்கப்பட்ட ஒரு முக்கிய கேள்வி இந்த வழக்கில் திருப்புமுனையை உண்டாக்குமா? என்ற எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அதாவது சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் சென்ற 18ஆம் தேதி முதல் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து வருகை தந்திருந்த மத்திய தடயவியல் துறை நிபுணர்கள் ராமஜெயம் கொலை குறித்து 12 பேரிடமும் கேள்விகளை எழுப்பினர். பதில்களை வீடியோ பதிவு செய்தனர்.

ஒவ்வொரு நபரிடமும் 12க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டாலும், ஒரு கேள்வி மட்டும் பொதுவானதாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. ராம ஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் தொடர்பான கேள்விதான் இந்த வழக்கில் ஒரு துருப்புச் சீட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ராமஜெயம் தன்னுடைய விரலில் விலை உயர்ந்த நீலக்கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை அணிந்திருப்பது வழக்கம். அவர் கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் அவருடைய உடலில் இருந்து வாட்ச், மற்றொரு மோதிரம், தங்கச் செயின் போன்றவை மீட்டெடுக்கப்பட்டனர்.

ஆனாலும் அவர் அணிந்திருந்த நீலக்கல் மோதிரத்தை மட்டும் காணவில்லை. கொலையாளிகளில் ஒருவர் அந்த மோதிரத்தை எடுத்து இருக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நீலக்கல் மோதிரம் தொடர்பான கேள்வியை மட்டும் எல்லோரிடமும் பொதுவாக அதிகாரிகள் எழுப்பியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

உண்மை கண்டறியும் சோதனையில் நீலக்கல் மோதிரம் யாரிடம் தற்சமயம் இருக்கிறது? என்பது மட்டும் தெரிந்து விட்டால் ராமஜெயம் கொலை வழக்கு ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த கேள்விக்கு விடை கிடைத்ததா? என்பது தடய அறிவியல் நிபுணர்களின் அறிக்கை வெளியான பிறகு தான் தெரியவரும்.

தற்சமயம் உண்மை கண்டறியும் சோதனை நிறைவு பெற்ற நிலையில், கேள்வி பதில் குறித்த அனைத்து விபரங்களையும் அறிக்கையாக தயாரிக்கும் பணியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.இந்த அறிக்கையை அவர்கள் மிக விரைவில் சிபிசிஐடி எஸ் ஐ டி என்று சொல்லப்படும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் துறையிடம் வழங்க இருக்கிறார்கள்.

Next Post

குழந்தைகளின் பசியை போக்கி ஆற்றில் தூக்கி வீசிய தாய்..!! நடந்தது என்ன..? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Fri Jan 27 , 2023
கடன் பிரச்சனையால் குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கோஸ்கியை சேர்ந்த வெங்கடேஸ்வர். இவரது மனைவி மானசா (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், பாலாதித்யா (8), பவ்ய ஸ்ரீ (7) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஸ்வரின் உடல்நிலை சரியில்லாததால், 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உயிரிழந்துவிட்டார். அதன் பின்பு, நிஜாமாபாத் […]
death

You May Like