Rape | ‘வேலை கேட்க சென்ற நர்ஸ்’..!! ‘வெறித்தனமாக பாய்ந்த டாக்டர்’..!! அரண்டுபோன மருத்துவமனை..!!

அசாம் மாநிலத்தில் வேலை கேட்டு மருத்துவமனைக்குச் சென்ற நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்ற டாக்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் நர்ஸ் ஒருவர் வேலை கேட்டு மருத்துவமனை ஒன்றை அணுகினார். அங்கு அவர் மருத்துவமனையின் உரிமையாளரையும், மூத்த மருத்துவரையும் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து தனி அறையில் நர்சை, இன்டர்வியூ செய்த மருத்துவர் திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அந்தப் பெண் அலறி அடித்து வெளியே ஓடிவந்தார்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து, தனது குடும்பத்தினரிடம் அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து, தனக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் பலாத்கார முயற்சி குறித்து உள்ளூர் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Read More : Annamalai | விஜயதரணியின் வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்..!! குஷியில் அண்ணாமலை..!!

Chella

Next Post

NTK Seeman | நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ’நீயா நானா’ பிரபலம்..!! யார் இந்த சந்திர பிரபா..?

Sat Feb 24 , 2024
நாம் தமிழர் கட்சியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து பிரபலமான மருத்துவர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு அரசியலுக்கு நுழைந்த சீமான், நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆனார். முதன்முறையாக 2016ஆம் ஆண்டு தேர்தலில் நுழைந்தார். பின்னர், 2016 சட்டமன்ற தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் நாம் தமிழர் […]

You May Like