இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், ’ரஸ்னா’ என்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவரும் அதன் தலைவருமான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பாட்டா காலமானார்.
1970களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட குளிர்பானங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ரஸ்னா. மலிவு விலையில் கிடைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ’ரஸ்னா’வுக்கு அடிமை என்றே கூறலாம். தற்போது ரஸ்னா உலகம் முழுவதும் 60 நாடுகுளில் விற்கப்படுகின்றது.
80ஸ், 90ஸ்களில் ’ஐ லவ் யூ’ ரஸ்னா என வரும் விளம்பரத்தை கூட மக்கள் தொலைக்காட்சியை மாற்றாமல் ரசித்து பார்ப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தது ரஸ்னா. ரஸ்னா நிறுவனர், இந்திய தொழில்துறை மற்றும் வணிகத்தில் முக்கியமான பங்கு வகித்தவர். அதிக அளவில் சமூக நலனில் அக்கறை கொண்டிருந்தவர். இந்தியாவில் மட்டும் 1.8 மில்லியன் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
’ரஸ்னா’ உலகின் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களில் முதன்மையாக உள்ளது. தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. 5 ரூபாயில் 6 கிளாஸ் ஜூஸ் குடிக்க முடியும் என்றால் அது ரஸ்னாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபித்துக்காட்டினார்.