6 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மத போதகர்..! 

கேரள மாநில பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட பட்டாம்பியில் அப்துல் ஹக்கீம், 30 என்பவர் வசித்து வருகிறார். இவர மதரசா என்று கூறப்படும் இஸ்லாமியத்தை தழுவிய மத போதனைகளை கற்றுத்தரும் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். 


கடந்த 2019 ம் ஆண்டில் 6 வயதான பள்ளியில் படிக்கும் சிறுமியை மதரசாவில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.இதனை தொடர்ந்து பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். 

பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து வந்துள்ளனர்.இந்த நிலையில் இதன் தொடர்பான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நேற்று நடந்து வந்துள்ளது. 

இதனை விசாரித்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு, 62 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அத்துடன் 3 லட்சம் ரூபாய் அபராதத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்குமாறு நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

#கோவை :காதல் மனைவியே கணவன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கொடூரம்..!

Thu Dec 1 , 2022
கோவை மாவட்ட பகுதியில் உள்ள சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியில் எலக்ட்ரீசியனான ரங்கன் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ரங்கனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் – மனைவிக்கு ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அத்துடன் ரங்கன் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை போட்டு அடித்து உதைத்துள்ளார். இந்த […]
n4471024161669875314600660b9f1034595837b3ba44541d94b3d9655efc050b3de6d0b9ec82dbb38059ef

You May Like