டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதை துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா சூசகமாக தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தபடியே, முதல்வர் பணியை அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, சிறையில் இருந்து அரசு இயங்காது என உறுதியளிக்கிறேன் என்று பதிலளித்தார். அதாவது, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்பு இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்தார்.
கடந்த 21ஆம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
Read More : பரப்புரை முடிந்த பிறகு சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்வது குற்றமா..? சத்யபிரதா சாஹூ அதிரடி பதில்..!!