தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால், அவரோடு இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி கூறியுள்ளார். மேலும், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் டிடிவி தினகரனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேனி மக்களவை உறுப்பினர் ஆனார் ஓ.பி.ரவீந்திரநாத். ஆனால், வரும் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில், விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயார் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி..? துணை ஆளுநர் வினய் குமார் சக்சேனா சூசக பதில்..!!