அபாய அளவைத் தாண்டிய ஆறுகள்… உத்தரப் பிரதேசத்தில் அதிகரிக்கும் வெள்ள அபாயம்!

80491a7a15662bb65c4e5b3fd81554f690ba00aa307fbf1d2d0ef05b329d78fa

உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை, திடீர் வெள்ளம், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு தீவிரப்படுத்தியுள்ளது.


செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பாதிப்புக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் பகுதிகளில் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க நிவாரண ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

சித்ரகூட், பிரயாக்ராஜ், வாரணாசி, பல்லியா, குஷிநகர், காஜிபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை ஆறு பல்லியா, மிர்சாபூர், காஜிபூர் மற்றும் பிரயாக்ராஜ் பகுதிகளில் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதேபோல், பல்லியாவில் காக்ரா, வாரணாசியில் வருணா, பிரயாக்ராஜில் டோன்ஸ், மிர்சாபூரில் ஜிர்கோ மற்றும் சோன்பத்ராவில் சோன் ஆறுகளும் அபாய அளவை கடந்துள்ளன.

மேலும், ஸ்ராவஸ்தியில் ராப்தி ஆறும், பாரபங்கி மற்றும் அயோத்தியில் சரயு ஆறும் அபாய அளவுக்கு மேல் நீருடன் செல்கின்றன. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

வெள்ளப்பாதிப்பு ஏற்கனவே நிலவி வரும் நிலையில், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளன. தற்போது வெளியாகியுள்ள வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் அவசரகால நடவடிக்கைகளுக்கான தயார்நிலையை மேலும் அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில் பண்டா, சித்ரகூட், கௌசாம்பி, பிரயாக்ராஜ், பதேபூர், வாரணாசி, சோன்பத்ரா, மிர்சாபூர், சந்தௌலி, கான்பூர், லக்னோ, அயோத்தி, ஆக்ரா, ஜான்சி, மதுரா, மீரட், பரேலி, முராதாபாத், ராம்பூர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சோன்பத்ரா, மிர்சாபூர், சந்தௌலி, காஜிபூர், வாரணாசி, பிரயாக்ராஜ், ஜான்பூர், பதோஹி, சித்ரகூட் மற்றும் கௌசாம்பி மாவட்டங்களில் திடீர் வெள்ளத்திற்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் மத்தியப் பகுதிகள், புந்தேல்கண்ட், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் NCR பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ், வாரணாசி, சோன்பத்ரா, மிர்சாபூர், லக்னோ, அயோத்தி, ஆக்ரா, கான்பூர், ஜான்சி, மதுரா, மீரட், காசியாபாத், கௌதம் புத்த நகர், சஹாரன்பூர், முசாபர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட பிறகு மீட்புப் பணிகளைத் தொடங்குவதுடன் நின்றுவிடாமல், பேரிடர் ஏற்படுவதற்கு முன்பே மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கனமழை அல்லது திடீர் வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் நிர்வாக அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Also Read: கணவருடன் விவாகரத்து வழக்கு… திடீரென வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட மம்தா பானர்ஜியின் மருமகள்!

Saranya

Next Post

"இஸ்ரோவில் வேலை வாங்கித்தரேன்"… 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம், செல்போனில் ஆபாச வீடியோக்கள்! இளைஞரின் பகீர் மோசடி!

Wed Sep 2 , 2026
இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்த இளைஞரின் மோசடி, அவரது செல்போன் ஆய்வுக்குப் பிறகு மேலும் அதிர்ச்சியான திருப்பத்தை சந்தித்துள்ளது. வேலைக்காக அணுகிய பெண்களுடன் நெருக்கமாக பழகியதுடன், அவர்களின் ஆபாச வீடியோக்களையும் செல்போனில் வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா படிகர். டிப்ளமோ படித்த இவர், பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் அதிகாரியாக பணியாற்றுவது போன்ற போலியான அடையாளத்தை இன்ஸ்டாகிராமில் உருவாக்கினார். […]
porn video woman

You May Like