ஸ்கெட்ச் தவறி கத்தி நண்பர் மார்பில் விழுந்து.. துடிதுடித்த ரவுடியின் நண்பர்.!

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குட்டி (எ) லோகநாதன் (45) என்பவர் ஹோட்டல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு 3 ரவுடிகள் குடிபோதையில் வந்து சாப்பாடு கேட்டுள்ளனர்.


அவர்கள் கேட்ட உணவு இல்லாத நிலையில் உணவளிக்க தாமதம் ஆனதால் மூவரும் கோபமடைந்து ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெங்கடேசன் அந்த நிர்வாகியின் கைகளை பிடித்து அருகில் இருந்த ரவுடியான காக்கா சுரேஷிடம் ‘இவனை குத்து’ என்று தெரிவித்துள்ளார்.

அப்போது கத்தியை எடுத்து லோகநாதனின் வயிற்றில் ஓங்கி குத்த முயன்றுள்ளார். திடீரென லோகநாதன் விலகிக் கொண்டதால், கத்தியானது வெங்கடேசனின் நெஞ்சில் பாய்ந்துள்ளது. மேலும் ரத்தவெள்ளத்தில் துடித்தது பார்த்ததும் காக்கா சுரேஷ் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.

காவல்துறையினர்க்கு தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சென்று படுகாயமடைந்த வெங்கடேசனை மீட்டு காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம், குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி காக்கா சுரேஷை கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

பேஸ்புக் பழக்கம்.. வீட்டிற்கு வந்து இளைஞரின் விபரீத செயலால் அதிர்ந்து போன குடும்பம்.!

Tue Nov 8 , 2022
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் கவுதம் இருவரும் வசித்து வருகின்றனர். இளைஞர் கவுதமுக்கு 2016ம் வருடம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலமாக அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், திடீரென்று அந்த இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கவுதமிடம் கூறியுள்ளார். அந்த பெண் கூறியதில் கோபமடைந்த கவுதம் தன்னை […]
பேஸ்புக் காதலியை தனிமையில் அழைத்துச் சென்ற காதலன்..!! கூடவே வந்த நண்பர்கள்..!! ஷாக்கிங் வீடியோ..!!

You May Like