மாதம் ரூ.1,000 உதவித்தொகை… இந்த மாதம் வழங்குவதில் காலதாமதம்…! என்ன காரணம்…?

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 ஏப்ரல் 8-ம் தேதி வழங்கப்படும்.

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ரூ.48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், 8 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும்.

இந்த மாதத்திற்கான பணம் வரவு வைக்கப்படுவதில் காலதாமதம் ஆகும். காரணம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கட்கிழமை இந்த பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh

Next Post

Weather Update: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்...!

Mon Apr 1 , 2024
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 3-ம் […]

You May Like