இனி இவர்களுக்கும் ரூ.1,000 மகளிர் உதவித்தொகை..! உதயநிதி ஸ்டாலின் சொன்ன சர்ப்ரைஸ்..!

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திமுகவின் நட்சத்திர பேச்சாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலை திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் இன்று ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த திட்டத்தில் உள்ள சின்ன சின்ன குறைபாடுகளை நீக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் மகளிர் உரிமைத்தொகை வாங்காத பெண்களுக்கும் ரூ. 1000 வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார்.

Kathir

Next Post

Lok Sabha 2024 | "அன்று இட ஒதுக்கீடு; இன்று தகரடப்பா"… அண்ணாமலை பேச்சால் எழுந்த புதிய சர்ச்சை.!

Tue Mar 26 , 2024
Lok Sabha: பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மாறி மாறி பொய் பேசி வருவதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் தங்களது சமூக வலைதளத்தின் மூலம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Lok Sabha) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி […]

You May Like