தூள்..! மாணவர் அம்மாவின் வங்கி கணக்கில் ரூ.15,000…! முதல்வரின் சூப்பர் திட்டம் அறிவிப்பு…!

school students money 2025

ஆந்திரப் பிரதேச அரசு வியாழக்கிழமை ‘தாய்க்கு வந்தனம்’ என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளி செல்லும் குழந்தைக்கும் ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ரூ.8,745 கோடியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.


ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் அறிவித்த வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு ‘தாய்க்கு வந்தனம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (இன்டர்மீடியட்) பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் மூலம் 67,27,164 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மட்டும், அவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த பள்ளிகளின் பதிவேட்டு பட்டியலின் அடிப்படையில் அவர்களின் தாயாருக்கு ரூ.15,000 பின்னர் வழங்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

வீட்டில் எத்தனை பேர் படித்தாலும் அனைவருக்கும் தலா ரூ.15,000 வீதம் வழங்கப்படும். ஆனால் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படித்தல் அவசியம். பள்ளிகளில் 75 சதவீதம் வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு மாணவ, மாணவிகளின் கல்விச் சான்றிதழ், ஆதார், தாய்மார்களின் வங்கிக் கணக்கு விவரம், தாயின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ், தேவைப்பட்டால் வருமானச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…!

Vignesh

Next Post

செக்...! நில அபகரிப்பு செய்வதை தடுக்க புதிய முறை...! தமிழக அரசு அதிரடி

Thu Jun 12 , 2025
நீர்நிலை, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் தனியாருக்குப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, பத்திரப் பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சிறப்பு குறியீடு வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுக்காக சர்வே எண்ணை உள்ளிடும் போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில் கண்டறிந்து, பதிவைத் தடுக்கும். இதனால், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் அபகரிப்பு செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு […]
patta 2025

You May Like