பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டிற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காகவும் புடின் இந்தியா வருவார் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டிற்காக 2025 டிசம்பர் 4-5 வரை இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்பதை வெளியுறவு அமைச்சகம் (MEA) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்த பயணத்தின் போது ஜனாதிபதி புடின் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். குடியரசு தலைவர் ரஷ்ய அதிபரை வரவேற்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விருந்து வைப்பார்.
வரவிருக்கும் அரசுமுறைப் பயணம், இந்தியா மற்றும் ரஷ்யா தலைவர்களுக்கு இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்யவும், ‘சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை’ மேலும் வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை அமைக்கவும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்..” என்று தெரிவித்துள்ளது..
Read More : ட்ரம்பின் புதிய கிரீன் கார்டு நடவடிக்கையால் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்களா..? விவரம் இதோ..



