நாளை பள்ளிகள் திறப்பு… அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம்…! தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி…!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும். 2025-26 கல்வியாண்டில் மாணவர் /மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

அதற்குன்டான கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும் பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி. இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Read More: யுபிஎஸ்சியில் 850 + காலியிடங்கள்..!! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.56,100 சம்பளம்..!!

Vignesh

Next Post

ஷாக்!. 24 மணிநேரத்தில் 4 பேர் பலி!. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3000-ஐ தாண்டியது!. மத்திய அரசு தகவல்!.

Sun Jun 1 , 2025
நாட்டில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை (மே 31, 2025) நிலவரப்படி, இந்தியாவில் 3395 கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில், கேரளாவில் அதிகபட்சமாக 1336 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான தொற்று நோயாளிகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-ஐத் தாண்டியது இதுவே முதல் முறை. மத்திய அரசு வெளியிட்டுள்ள […]
Corona 2025 3

You May Like