பாஜக-வில் இணைகிறாரா செந்தில் பாலாஜி? அடுத்தது முதல்வர் பதவி தான் – தங்கமணி பேச்சு…

கரூர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திரு.வி.க கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளில் அதிமுக மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சிவராஜ் திமுக பிரமுகர் ஒருவரால் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு மீட்கப்பட்டார். இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், திமுக அரசை கண்டித்து கரூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.


அதன்படி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில், திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுகூடத்த்தில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

18FEBTH THANGAMANI

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “தொண்டர்களை பாதுகாக்கும் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுக தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். கரூர் தனி மாநிலமாக உள்ளது. ஏனென்றால் இங்குள்ள அதிகாரிகள் தனி அரசாங்கம் நடத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வருவார். தவறு செய்யும் அதிகாரிகள் எங்கு இருந்தாலும் விடமாட்டோம்.

கரூரில் உள்ள உளவுத்துறையினர் செந்தில்பாலாஜியின் ஆட்கள், அவர்கள் முதலமைச்சருக்கு கூட தகவல் சொல்ல மாட்டார்கள். செந்தில்பாலாஜி அடுத்ததாக இணையப்போகும் கட்சி பாஜக. ஸ்டாலின் குடும்பமே செந்தில் பாலாஜியை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை ஒன்றை தெரிவிக்கிறேன். செந்தில்பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான்” என்று கூறினார்.

Newsnation_Admin

Next Post

ஒரே நாளில் இவ்வளவு புக்கிங்கா? புத்தாண்டில் OYO-வில் குவிந்த கூட்டம்!

Tue Jan 3 , 2023
பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குவதற்கு உதவியாக விளங்கி வருவது விடுதிகள். ஆன்லைன் மூலமாக விடுதிகள் முன்பதிவு செய்வது அதிகரித்துவிட்ட நிலையில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளும் தற்போது விடுதிகளாக மாறியுள்ளன. இந்த நிலையில் 2023 புத்தாண்டு தினத்தன்று OYO-வில் புக்கிங் செய்யப்பட்ட ரூம்கள் எத்தனை என்பது குறித்து அதன் நிறுவனர் மற்றும் அந்த குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால் தனது […]
பேஸ்புக் பெண்ணுடன் சகவாசம்..!! குமரியில் ரூம் போட்ட கார் புரோக்கர்..!! ரூட்டை மாற்றிய இளம்பெண்..!!

You May Like