ஷாக்!. புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 75,000 மேற்பட்டவர்கள் பலி!. ஜூலை 1 முதல் அதிரடி தடை விதித்த பிரான்ஸ்!

france smoking ban 11zon

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொதுத் தோட்டங்கள், பள்ளிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்ற பரந்த அளவிலான வெளிப்புற இடங்களில் தடை உத்தரவு பொருந்தும். எனினும், கஃபே உள்ளிட்ட இடங்கள் புதிய விதிகளுக்கு உட்படாது, மேலும் மின்னணு சிகரெட்டுகளும் விலக்கப்படும்.


இதுதொடர்பாக அந்நாட்டின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் கூறுகையில், “குழந்தைகள் இருப்பிடங்களில் புகையிலை மறைந்துவிட வேண்டும்,” . சிகரெட் புகையிலிருந்து சிறார்களைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய அவர், புகைபிடிக்கும் சுதந்திரம் “சுத்தமான காற்றை சுவாசிக்கும் குழந்தைகளின் உரிமை தொடங்கும் இடத்தில் நின்றுவிடும்” என்றார். எனவே, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விதியை மீறுபவர்களுக்கு 35 யூரோக்கள் ($154) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

புகையிலை தொடர்பான நோய்களால் வருடத்திற்கு 75,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர். இது மொத்த மரணங்களில் 13% ஆகும். 2008 முதல், பிரான்ஸில் உணவகங்கள் மற்றும் இரவுக் கிளப்புகள் போன்ற இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் தேசிய குழு தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு போதைப்பொருள் மற்றும் அடிமையாக்கும் நடத்தைகள் ஆய்வகம் நடத்திய மற்றொரு ஆய்வில், பிரெஞ்சு மக்களிடையே, குறிப்பாக 17 வயதுடையவர்களிடையே தினசரி புகைபிடித்தல் குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல், 17 வயதுடையவர்களிடையே தினசரி புகைபிடித்தல் 15.9 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது, இது குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டுகிறது. அதே நேரத்தில், வேப்பிங் பிரபலமடைந்து வருகிறது, 17 வயதுடையவர்களில் 56.9 சதவீதம் பேர் இதை முயற்சித்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

மகப்பேறு விடுமுறையில் முக்கிய மாற்றம்.. பெண் அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்..!!

Fri May 30 , 2025
திருமணமான பெண் அரசு பணியாளர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதிகாண் பருவத்திலும் கணக்கில் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பான முக்கிய மாற்றத்தை அரசு இன்று அறிவித்துள்ளது. திருமணமான பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு, இப்போது தகுதிகாண் பருவத்திலும் (Probation Period) சேவைக்காலமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய […]
meternity leave

You May Like