அதிர்ச்சி!. ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான எரிபொருள் விலை! ஏறுமுகத்தில் பயணக் கட்டணம்?.

Flight 2026

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.6.28 உயர்த்தியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் ரூ.115-லிருந்து ரூ.121.28 ஆக (5.46% உயர்வு) அதிகரித்துள்ளது.


இந்தியாவில் விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் 35% முதல் 40% வரை விமான எரிபொருளுக்கே செலவாகிறது. எரிபொருள் விலை உயர்வதால் விமான நிறுவனங்களின் செலவு அதிகரிக்கும். எனினும், பயணிகளின் தேவை, நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே விமானக் கட்டணங்கள் உயருமா என்பது தீர்மானிக்கப்படும்.

19 கிலோ வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விலை ரூ.9.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,747.50 ஆக விற்பனையாகிறது. 5 கிலோ சிலிண்டர் விலை ரூ.762-லிருந்து ரூ.764 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விலைக் குறைப்பு செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் ஆதாய வரியை (Windfall Gains Tax) மத்திய அரசு குறைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

1newsnationuser5

Next Post

விஜய் முதல்வரான பிறகு தலைமைச் செயலகத்தில் மாற்றம்? ஊழியர்களின் பணிநேரத்தில் கடும் கட்டுப்பாடு!

Tue Sep 1 , 2026
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பணிநேர நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நேரக்கட்டுப்பாடு மற்றும் பணிச்செயல்பாடு, தலைமைச் செயலகத்தின் அன்றாட பணிச்சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் தனது அலுவல் பணிகளில் நேரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. காலையிலேயே […]
cm vijay n 1

You May Like