திருச்சி: குழந்தைகள் காப்பகத்தில் தடுப்பூசி போட்டு அடுத்தடுத்து 3 குழந்தைகள் மரணம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த குழந்தைகளின் மரணம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கத்தின் மாம்பழச் சாலையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் 15 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன இந்த காப்பகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி செலுத்தியதிலிருந்து எட்டு குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சையிலிருந்து திரும்பிய மூன்று குழந்தைகள் காப்பகத்திற்கு வந்த நிலையில் இன்று உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.


இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வாமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அந்த குழந்தைகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே காப்பகத்தைச் சார்ந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

பகீர்..... குழந்தையின் மீது கொதிக்கும் பாலை தெளிக்கும் சாமியார்! கண்டனங்களை பதிவு செய்யும் நெட்டிசன்கள்!

Thu Apr 13 , 2023
எவ்வளவுதான் அறிவியல் தொழில்நுட்பம் கல்வி என வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகளும் ஒரு பக்கம் இதற்கு சமமான வேகத்தில் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. குழந்தையின் மீது சாமியார் ஒருவர் சூடான பாலை தெளிப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த மூடநம்பிக்கைக்கு எதிராக பல்வேறு மக்களும் தங்களது […]
IMG 20230413 WA0311

You May Like