சித்தராமையாவுக்கு துப்பாக்கியுடன் மாலை அணிவிப்பு!… காங்., தொண்டரின் அதிர்ச்சி சம்பவம்!

Karnataka: கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியுடன் சென்று முதல்வர் சித்தராமையாவுக்கு மாலை அணிவித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக மாநிலங்கள் முழுவதும் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன.

இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கர்நாடகாவின் தெற்கு பெங்களூரு தொகுதி காங்., வேட்பாளரை ஆதரித்து முதல்வர் சித்தராமையா திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது காங்., தொண்டர் ஒருவர் துப்பாக்கியுடன், முதல்வர் பிரசார வேனில் ஏறி மாலை அணிவித்தார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Readmore:செம குட் நியூஸ்..!! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65..!! வாகன ஓட்டிகள் நிம்மதி..!!

Kokila

Next Post

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்..? வெளியாகுமா அறிவிப்பு..? சத்யபிரதா சாஹூ முக்கிய தகவல்..!!

Tue Apr 9 , 2024
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70). இவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் […]

You May Like