சிங்கப்பூரில் ஜாலான்யூனோஸ் என்ற பகுதியில் இருந்து துவாஸ் பகுதிக்கு சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை உடையப்பன் என்ற இந்திய வாலிபர் ஓட்டி சென்றார். அவருக்கு உதவியாக ராஜேந்திரன் என்பவரும் அந்த லாரியில் இருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த சைக்கிளுக்கு வழி விடாமல் அவர்கள் அந்த சைக்கிளை தடுப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த லாரியின் ஓரமாக சென்று கொண்டிருந்த முதியவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லாரியை ஒட்டிய உடையப்பன் வீடு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 1 வருட கால சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கு உதவியாக இருந்த ராஜேந்திரன் என்பவருக்கு மூன்று மாத சிறை தண்டனை தெரிவித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.