24 மணிநேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை..!! இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்..!!

கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


அந்தமான் பகுதியில் மே 20ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது .கேரளாவில் வழக்கம் போல ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஆகியுள்ளது. இருப்பினும் 4 நாட்கள் முன்பின் ஆனாலும் வழக்கமான காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாகவே கணிக்கப்படுகிறது. ஜூன் 5ஆம் தேதி தேதிக்கு மேல் பருவமழை தொடங்கினால் அது தாமதமான பருவமழை என்று தெரிவிக்கப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை கேரளாவில் தொடங்கவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கினால் தமிழகத்தில் வெயில் குறைய தொடங்கும்.

அரபிக் கடலில் ஏற்பட்ட காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த காற்று வீசும் திசை மாற்றத்தினால் தென்மேற்கு பருவமழை வீசுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

காலையிலேயே ஃபுல் போதை..!! காரை ஓட்டி உயிர் பலி வாங்கிய துணை நடிகர்..!! சென்னையில் பரபரப்பு..!!

Thu Jun 8 , 2023
சென்னையில் பைக்கில் சென்றவர் மீது துணை நடிகர் பழனியப்பனின் கார் மோதியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் சரண்ராஜ் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக துணை நடிகர் பழனியப்பன் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சரண்ராஜ் மீது பழனியப்பனின் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே […]
WhatsApp Image 2023 01 12 at 9.18.36 AM

You May Like