சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Madras University 2025

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, முதுகலை, பட்டயம் சான்றிதழ் மற்றும் முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை கணினி பயன்பாடுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், http://online.ideunom.ac.in என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, முதுகலை, பட்டயம் சான்றிதழ் மற்றும் முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை கணினி பயன்பாடுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், http://online.ideunom.ac.in என்ற இணையத்தளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வி நிறுவனத்திலுள்ள ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழியே மாணவர்கள் சேரலாம் என்றும் இந்த மையம் சனி, ஞாயிறு உள்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் (அரசு பொது விடுமுறை தவிர) செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: தூள்…! தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மட்டும் தான்… பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

மனிதர்களும் நாகப்பாம்புகளும் ஒன்றாக வாழும் ஒரு ஆபத்தான கிராமம்!. இந்தியாவில் இந்த கிராமம் எங்கு உள்ளது தெரியுமா?

Fri Jun 6 , 2025
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனென்றால் பாம்புகள் மிகவும் ஆபத்தானவை, அவை கடித்தால் ஒருவரின் மரணம் நிச்சயம். உலகில் ஒரு கிராமம் இருக்கிறது, அங்கு மக்கள் வசதியாக பாம்புகளை வளர்த்து அவற்றுடன் வாழ்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை நாகப்பாம்புகள். இது பாம்புகளின் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாம்பு கிராமம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயர் ஷெட்பால். ஆனால் இங்கே ஏன் இவ்வளவு […]
snakes village 11zon

You May Like