பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் பயணித்த விஷ்ணு என்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது இரங்கல் செய்தியில்; […]

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை வியாசர்பாடியில் இருந்து அருப்புக்கோட்டையில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்விற்காக பயணிகள் வேனில் டிரைவர் உட்பட 18 பேர் சென்று கொண்டிருந்தனர். வேனை வியாசர்பாடி சார்ந்த 32 வயதான கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் கார்த்திக்கிற்கு […]

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சைக்கிளில் சென்ற மூன்று மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையம்பட்டு கிராமத்தைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் மூலமாக அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வளையம்பட்டு மேம்பாலம் அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மாணவர்களின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த […]

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் பிஈ20 சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரில் உள்ள கிளின்டன் விமான நிலையத்திலிருந்து ஒகியோ நகரில் உள்ள ஜான் க்ளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு இரட்டை எஞ்சின் கொண்ட பிஇ20 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிளின்டன் விமான நிலையத்திற்கு அருகில் […]

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சார்ந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர்கள் முஹம்மது அஜீஸ் மற்றும் விஜேஷ் மிஸ்ரா. இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள மணிகண்டம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தனர். இருசக்கர வாகனத்தின் மூலம் தங்கள் அலுவலகம் செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இவர்கள் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது திருச்சி மதுரை […]

ஒரு பெண் இல்லத்தரசி என்ற காரணத்திற்காக வாகன விபத்துகளில் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. 2006-ம் ஆண்டு கேரள மாநில போக்குவரத்து கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து விபத்துக்குள்ளானதில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு இழப்பீடு வழங்க மறுப்பதாகவும் கூறியிருந்தார்.. இந்த […]

கேரள மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் விபத்து காரணமாக அவரது பிறந்த நாளன்று மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு தல பாடி பகுதியைச் சார்ந்தவர் ஜெயசீலா இவருக்கும் ரஞ்சன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுகளுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. இந்நிலையில் அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று அவரது பிறந்த நாள், வழக்கம்போல் பணிக்குச் […]

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் மீது அரசு பேருந்து மோதியது இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மரத்தில் மோதி சுக்கு நூறானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். […]

இரண்டாம் வகுப்பு மாணவி மத்தாப்பு பற்ற வைத்த போது ஆடையில் தீப்பற்றி படுகாயமடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்குபுதூர் பகுதியைச் சார்ந்தவர் சரவணன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் சஸ்விதா ஏழு வயதான அந்த குழந்தை  அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறது. இந்நிலையில் குழந்தை  சஸ்மிதா தன்னுடைய தாத்தா வீட்டிற்கு  விசேஷத்திற்காக சென்றுள்ளது. அப்போது பூஜை அறையில் உள்ள […]

மது பழக்கம் என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கும். அப்படி அச்சிடப்பட்ட மது பாட்டில்களை வாங்கி அந்த வாக்கியத்தை படித்துவிட்டு அதன் பிறகும் அதை குடிக்கும் குடிமகன்களை இந்த தமிழகம் பெற்று இருக்கிறது என்று சொன்னால் இது சற்று வருத்தமான செய்தி தான். இந்த மதுப்பழக்கத்தால் பல தாய்மார்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய நிம்மதியை இழந்திருக்கிறார்கள். இன்னும் […]