அகமதாபாத் ர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நேற்று பிற்பகல் 1.17 மணியளவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 265 உயிரிழந்தனர்.  விமானம் விபத்துக்குள்ளான பிறகு, விமானத்தில் பயணம் செய்யும் […]

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் […]

நாட்டையும் உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து குறித்து பிரபல ஜோதிடர் முன்கூட்டியே கணித்துள்ளார். குஜராத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நேற்று பிற்பகல் 1.17 மணியளவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. விடுதியில் மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த […]

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளது. கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன.. மேடே அழைப்பு எப்தெல்லாம் பயன்படுத்தடும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 7878 (விமானம் AI171) புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் இருந்து மேடே அழைப்பு விடுக்கப்பட்டது. […]

இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து 216 பயணிகள், 16 விமான பணியாளர்களுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானி விமானத்தை ரஷ்யாவில் உள்ள மகதான் விமான நிலையத்திற்கு திருப்பி விட்டதாக டாடா குழுமத்திற்கு சொந்தமான தனியார் கேரியர் நேற்று மாலை ஒரு அறிக்கையில் […]

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா தனது விளக்க குறிப்பில், புனே-டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI858 விமானத்தின் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5.44 […]

ஏர் இந்தியா இன்ஜினியரிங் லிமிடெட் சர்வீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏர்கிராஃப்ட் சர்வீஸ் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி யார் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஏர் கிராஃப்ட் டெக்னீசியன் பணிகளுக்கான 90 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸில் பணிபுரிய விருப்பம் உள்ள நபர்கள் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் எலக்ட்ரிக்கல், […]