மழை, வெள்ளம் வந்தாலும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தொடரும் என்றும் நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு புதிய சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இணையுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக (NFSU) வளாகம் மற்றும் மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மழைக்காலத்தின் ஒவ்வொரு முறையும், […]

ஆங்கிலம் குறித்து அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டம் தெரிவித்துள்ளார் . ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”ஆங்கிலம் மொழி இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல. அது முன்னேற்றத்திற்கான […]

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜகவின் பயிற்சி முகாமில், கட்சி தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த சிந்தூர் நிகழ்வைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு அமைச்சர் விஜய் ஷா, இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதியின் சகோதரி” என குறிப்பிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, பயிற்சி முகாமில் பங்கேற்ற அமித் ஷா, […]

2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என […]

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார். பெரம்பலூரில் மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்; கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் கேட்பது இயல்பு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளது போல, நாங்களும் இந்த முறை திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்போம். […]

மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை உச்சரித்த போதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், […]

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் இன்று பாஜக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை […]

அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளரான நியமிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வியூகம் தீட்டும் வேலைகள் முழுசாக துவங்கிவிட்டன. இதன் தொடக்கமாக, மதுரையில் இன்று (ஜூன் 8) மாலை ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் நடைபெறும் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கூட்டத்தில் […]

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவரது பயணத்தை முன்னிட்டு சென்னை மற்றும் மதுரையில் வைக்கப்பட்ட பேனர்கள், அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. “எங்க தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control தான்”, “டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது” போன்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. அப்போது அவர், “தமிழ்நாடு […]