பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ள நிலையில், ஊழல் திமுக ஆட்சியை ஒழிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டதாக மோடி பதிவிட்டிருந்தார்.. இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியை தான் தரும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக கொடுத்த […]

உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை காட்டுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.. அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்கு  ரூ.365.87 […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்..  […]

ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ரூ. 12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் […]

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ […]

இன்று கூடுகிறது பாஜக உயர்மட்ட குழு கூட்டம்‌. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் கூடுகிறது, கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது . கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. […]

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சிஅளிக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 […]

மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது முதல், அண்ணாமலைக்கு எந்த வகையான மாநில அல்லது தேசிய பதவியும் வழங்கப்படவில்லை. முன்னாள் தலைவர் என்ற முறையில் மட்டுமே அவர் பாஜவில் உள்ளார். இதனால் கட்சி சார்பான நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கு பெறாமல் இருந்துவருகிறார். இதனிடையெ அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொண்டு வருகிறார். இது ஒரு புறம் இருக்க ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் சந்தித்து பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் […]

ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், […]