2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால், தலைவர் அன்புமணியோ பாஜக கூட்டணியை விரும்பினார். […]

விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாதது குறித்து உழவர்கள் கதறி அழுது முறையிட்டாலும் கூட, கொள்முதலில் இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன் உழவர்கள் தவம் […]

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் […]

பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன், விஐபி தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இந்த முடிவை வெளியிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், ஆளும் NDA மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார்.. […]

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்தலாக மாறியுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்றாலும், புதிய தலைமைகள் மற்றும் இளைய தலைமுறை வருகையால் தேர்தல் கணிக்க முடியாத போட்டியாக மாறலாம். திமுக தலைமையிலான […]

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த தீர்ப்புக்கு தவெகவினர், அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அந்த வகையில் பாஜக இந்த தீர்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய […]

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் துணை அதைகாரிகளுக்கு இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு, வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் உள்ளிட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் நடத்தியது.இந்த பயிற்சியில் 243 வாக்குச்சாவடி அதிகாரிகள் 1418 துணை […]

இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்கிறது, அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் […]