சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி வரை, 25,585 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர். ஆனால், நடப்பாண்டில் ஆக., […]

ஓணம் பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் கேரள மாநிலத்தவர்கள் வசதிக்காகச் சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமானங்களுக்குக் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. வார இறுதி விடுமுறையும் பண்டிகையும் இணைந்து வருவதால் பயணிகள் பலர் ரயில்களைத் தவிர்த்து விமானப் பயணங்களை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணங்களை […]

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடைபெறவிருக்கும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் தமிழகம் வந்தடைந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியின் முதலமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ‘தென் மாநில முதல்வர்கள் மாநாடு’ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய […]

“ஒரு பஸ் வருமா?” என்று வெயிலிலும் மழையிலும் சாலையோரம் காத்திருந்த நிலை இனி மாறப்போகிறது. வடசென்னை தண்டையார்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வாக, ரூ.2.4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. எண்ணூர் ஹை ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையம், இதுவரை தற்காலிகமாக பேருந்துகள் இயக்கப்பட்ட இடத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக […]

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்று அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பல்லாயிரக்கணக்கான சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீடு குறித்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருவதால் பொதுமக்களும் சொத்து உரிமையாளர்களும் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். முன்னதாக கணக்கிடப்பட்ட போது குறைவாக வரி மதிப்பிடப்பட்டிருந்த சுமார் 3.5 லட்சம் சொத்துக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு மட்டுமே இந்த மறுமதிப்பீடு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் […]

சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) சில முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. மின் வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளன. பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள்:கே.கே. நகர் பகுதியில், காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா […]

சென்னையில் பொதுமக்களின் இணைய பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், 44 இடங்களில் இலவச வைபை (WiFi) சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இலவச வைபை (WiFi) வசதி 10.08.2026 முதல் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய பகுதிகளில் இலவச வைபை (WiFi) வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக, மெரினா […]

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தற்போது நிலவும் நடைமுறைப்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் […]

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளராக வடிவேல் இராவணன் மற்றும் பொருளாளராக திலகபாமா ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் தமிழக நலன் மற்றும் கட்சி வளர்ச்சி சார்ந்த மொத்தம் 31 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், மருத்துவர் ஐயாவின் கொள்கைகளை வென்றெடுத்து 2031-ஆம் ஆண்டில் பாமக ஆட்சியை அமைப்பதே […]

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூலை 29ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 […]