கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது. இது போன்ற குற்ற செயல்களை தடுக்கும் விதமாக மாநிலஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் பல சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் விலை உயர்ந்த பொருட்களை திருடினால் கூட […]

தலைநகர் சென்னையில் சென்ற 4ம் தேதி நடைபெற்ற விழா ஒன்று தமிழ்நாடு என்று தெரிவிப்பதை விட தமிழகம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் ரவி பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்காக அனுப்பிய அழைப்பிதழ் மறுபடியும் சர்ச்சையாக வெடித்தது. ஆளுநர் மாளிகையின் அந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என எழுதுவதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர் […]

இணையதளத்தை பொருத்தவரையில் அது இளைஞர்களாக இருந்தாலும் சரி, அல்லது இளம் பெண்களாக இருந்தாலும் சரி தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் இணையதளம் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றனர். அதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இது போன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனுடன் படித்த ஒரு நபரை காதலித்தார். ஒரு […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் கடந்த 8ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கோயம்பேடு காவல்துறையினர் திடீரென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் அந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு, சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு சமயங்களில் […]

ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்திய தர நிர்ணய ஆணையத்தின், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழுவினர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் உள்ள நார்த் ஸ்டார் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ​​இந்திய தர நிர்ணய அமைவன சட்டத்தின் ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், மொத்தம் 48 பொம்மைகள் (47 மின்சாரம் அல்லாத பொம்மைகள், 1 […]

எந்த ஒரு செயலுக்கும் தற்கொலை ஒரு நல்ல முடிவாக இருக்காது. விரும்பத்தகாத செயல்கள், மன உளைச்சலை அளிக்கும் செயல்கள் என்று பலவிதமான செயல்கள் நம் கண் முன்னே நடக்கலாம்.ஆனால் அவை அனைத்தையும் நாம் நிச்சயமாக அமைதியான முறையில் கடந்து வந்து தான் ஆக வேண்டும். அதற்காக நிச்சயமாக நம்முடைய மன தைரியத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். அப்படி மன தைரியம் இல்லாவிட்டால் மன உளைச்சல் ஏற்படும்போது நிச்சயமாக தற்கொலை உள்ளிட்ட […]

வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோர்கள் எப்போதும் தங்களுடைய குழந்தைகளிடம் நண்பர்களாகவும் பழக வேண்டும், அதே நேரம் அவர்களின் நடவடிக்கைகளிலும் கண்காணிப்பாக இருக்க வேண்டும். அதோடு பெற்றோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் அதேபோல பெற்றோர்கள் இடையே ஏற்படும் சிறு,சிறு தகராறு கூட குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை குன்றத்துரை அடுத்துள்ள மணிகண்டன் […]

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள ஏர்ணாவூர் காமராஜர் நகரில் ஷாலினி (27) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆவடி அருகே உள்ள ப்யூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ரயிலில் ஆவடி பகுதியில் சென்றுவிட்டு பணி முடித்து விட்டு, இரவு வீடு திரும்புவது வழக்கம்.  இந்த நிலையில், வழக்கம் போல் வேலை முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் […]

சென்னை மாநகர பகுதியில் பிரதாப் (34) எனபவர் தனது மனைவி சிந்தூரா மற்றும் மகள் ஆத்யா (4) ஆகியோருடன் வசித்து வருகிறார். அத்துடன் பிரதாபின் தாயார் ராஜாத்தியும் வசித்து வந்துள்ளார்.  பிரதாப் ஹைதராபாத்திலுள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். மனைவி சிந்தூரா, அதே பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் தர்னாகா என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து […]