கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இந்த சூழலில் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். […]

தொழிலதிபர் சேகர் ரெட்டி அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ,சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015-16ஆம் மதிப்பீட்டு வருடத்திற்கு 20 லட்சம் ரூபாயும 2017-18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானவரித் துறையின் இந்த நோட்டீஸின் மீது […]

கள்ளக்குறிச்சி பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் வகையில் முழுமையாக திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற […]

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டதிட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் துரைப்பாக்கத்தில் வசிக்கும் சலபதிக்கு சொந்தமாக வீட்டுமனை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காலமானார். போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து சிலர் அந்த நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு தெரிய வந்ததை அடுத்து, இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர். போலி […]

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும் சாதாரண ஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது வெள்ளி விளக்குகள் விற்பனை செய்த வகையில் தனக்கு தரவேண்டிய பாக்கியை தராததால் சலானிக்கு எதிராக வெள்ளி வியாபாரி ரமேஷ், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தன்னை விசாரிக்க அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், தனது காரின் ஆவணங்களை […]

பொதுமக்கள் கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்ப்பது மருத்துவர்களை மட்டும் தான். இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு ஏதாவது உடலளவில் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் சாதாரண பாமர மக்கள் முதல் பெரிய பணக்காரர்கள் வரையில் கை கூப்பி நிற்பது முதலில் மருத்துவர்களிடம்தான். அதன் பிறகு தான் உடல் நலம் பெற வேண்டும் என்று கோவிலுக்கு சென்று வருவார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்கள் எந்த அளவிற்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது யாருக்கும் தெரியாத […]

இந்திய தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு பின்வரும் வழக்கறிஞர்களை சென்னை, அலகாபாத் மற்றும் கர்நாடக மாநில உயர்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். இதன்படி, வழக்கறிஞர்களான லெஷ்மண சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதித்துறை அதிகாரிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சையத் கொமார் ஹசன் […]

முஸ்லீம் பெண்கள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் குலா சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முஸ்லீம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் தலாக் நடைமுறையை போல, மனைவிகள் கணவரை விவாகரத்து செய்யும் வகையில் குலா நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையின்படி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷரியத் கவுன்சிலில் மனைவி பெற்ற குலா […]

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பார்கள் மூடப்பட்ட பிறகு திறந்த இடங்களில் மது அருந்துவதை தடுக்க உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை […]

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை […]