புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்க உள்ளார். இன்று முதல் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். […]

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.. 144 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.. 2 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.. இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ ஆளுநர் அரசியல் சட்டத்தை கடந்து, அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் செயல்படுவதால் இப்படி ஒரு தீர்மானத்தை 2வது முறையாக முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஆளுநர் ஏற்படுத்தி உள்ளார்.. ஆட்டுக்கு தாடியும், நாட்டிற்கு ஆளுநர் […]

தி கிரேட் டிக்டேட்டராக தன்னை ஆளுநர் நினைத்துக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது அவர் தனது அறிக்கையில்; பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். […]

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டில் பிஎம் மித்ரா (PM MITRA) பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ.குமாரலிங்கபுரம் கிராமத்தினைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காவின் மூலமாக […]

பெண் காவலர்கள் நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்ட பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இது பொன் விழா அல்ல. பெண் விழா.. தமிழக காவல்துறையில் அனைத்து நிலைகளிலும் 35,329 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.. வீட்டையும், நாட்டையும் சேர்த்து […]

கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் […]

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.. திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த திட்டம் […]

நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,“நான் படித்த பள்ளிக்கு போகப்போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன் தூக்கம் வரவில்லை, வழக்கமாக 2-3 மணிக்குதான் தூங்குவேன், அந்த தூக்கமும் நேற்று வரவில்லை. மாணவப் பருவம் என்பது திரும்ப கிடைக்காத காலம். இங்க இருக்கும் சில முகங்களை பார்க்கும்போது குறிப்பாக என்னுடைய தமிழ் […]

முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திடீரென மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டதால் என்ன காரணம் என்று தெரியாமல் தொண்டர்கள் முதல்வருக்கு என்ன ஆச்சு என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது அதற்கான பதிலை மருத்துவமனையில் கூறியுள்ளது. முதல்வர் சிகிச்சை பெற்ற சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதில், முதலமைச்சர் […]

உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்‌ ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ மற்றும்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை கொண்டுவர நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்தில்‌ நிகழ்ந்த ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ 7 பேர்கள்‌ உயிரிழந்தனர்‌. இதில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த திருமதி. கலா ரமேஷ்‌, பிரேம்குமார்‌ வாஞ்சிநாதன், சுஜாதாபிரேம்குமார்‌ ஆகிய மூவரும்‌ கேதார்நாத்‌, பத்ரிநாத்‌ ஆகிய இடங்களுக்கு புனிதயாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர்‌ […]