கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப் […]
court
திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்துப் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை […]
நாகர்கோவிலில் ரோமன் கத்தோலிக்க மறை மாவட்டம் (ஆர்.சி.டயசிஸ்) கோட்டார் கட்டுப்பாட்டில் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் தேவாலயங்கள் உள்ளன. இப்பள்ளிக்கு மத்திய, மாநில அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்குள்ள தேவலாயம் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வகித்து பாதுகாக்கும் பணியில் 20 பேர் ஈடுபட்ட வருகின்றனர். இச்சூழலில் கடந்த 2004 இல் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் அதிகாரிகள், கோட்டாரில் உள்ள பேராயர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் […]
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கேசவன் ராஜ் என்ற லாரி ஓட்டுநர் தூத்துக்குடியில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற போது இன்று அதிகாலையில் பல்லடத்தில் தாராபுரம் பிரிவில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரிக்கு எதிரே கோவையில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் அபிஷேக் குமார் ஆகிய இருவரும் லாரியை உரசுவது போல காரை இயக்கியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் கேஷ்வன்ராஜ் […]
ராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 259 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் RS மங்களம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல் பாம்பு கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான […]
கடந்த மாதம் கேரள மாநில அரசுப்பேருந்தில், திருச்சூரில் இருந்து கோழிக்கோடு சென்றபோது, மாடலும், இளம் நடிகையுமான நந்திதா சங்கரா என்பவர் முன், அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த 28 வயதான சாவத் ஷா என்பவர் ஆபாசமாக நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. அது வைரலாகியுள்ளது. நந்திதா சங்கரா மற்றும் இன்னொரு பெண்ணுக்கு மத்தியில் அமர்ந்திருந்த இளைஞர் சாவத் ஷா, முதலில் நந்திதாவிடம் இயல்பாக பேசுவது போன்று பேச்சுக் கொடுத்துக்கொண்டே தவறாக நடக்க முயன்ற […]
மதுரை, புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் செல்போன், கேமரா மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோயிலில் உள்ளே உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அருண் போட்டோகிராபி, ஸ்டாலின் போட்டோகிராபி, ஒன் கிளிப் போட்டோகிராபி, சீரா போட்டோகிராபி மற்றும் அருவி போட்டோகிராபி ஆகியோர் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சிற்பங்கள், சிலைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் […]
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை 7 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. திருவிழா நாட்களில் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதும், இதில் குறிப்பாக சிறுவர்களுடன் குடும்பம் குடும்பமாக வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர் . பல மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை […]
சிங்கப்பூரில் ஜாலான்யூனோஸ் என்ற பகுதியில் இருந்து துவாஸ் பகுதிக்கு சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை உடையப்பன் என்ற இந்திய வாலிபர் ஓட்டி சென்றார். அவருக்கு உதவியாக ராஜேந்திரன் என்பவரும் அந்த லாரியில் இருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த சைக்கிளுக்கு வழி விடாமல் அவர்கள் அந்த சைக்கிளை தடுப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சைக்கிள் […]
தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் இது தொடர்பாக […]