திருமண உறுதிமொழியின் அடிப்படையில், இருவரும் சம்மதித்து உடல் உறவு கொண்ட பின், சில காரணங்களால் திருமணத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று ஒரிசா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு, அவரது தோழியான ஒரு பெண்ணால் முன்வைக்கப்பட்டுள்ளது. நல்லெண்ணத்தில் கொடுத்த அளித்து […]
court order
நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண் தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பஆஷா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்குவது போல் […]
மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேலும் இந்த கோவில் திருவிழாக்களின் போது, எந்த தனிநபரும் கமிட்டி அமைக்க கூடாது என ஏற்கனவே 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் […]
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை 7 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. திருவிழா நாட்களில் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதும், இதில் குறிப்பாக சிறுவர்களுடன் குடும்பம் குடும்பமாக வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர் . பல மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை […]
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று காரைக்குடி புதுச்சந்தை பேட்டை தெற்கு பகுதியில் இருந்தது. அந்த செல்போன் கோபுரம் ஏர்டெல் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் இந்த செல்போன் கோபுரம் பயன்பாட்டில் இல்லை என்று கூறப்படுகின்றது. இத்தகைய நிலையில், செல்போன் கோபுர நிறுவன அதிகாரிகள், தாஜ்மல்ஹான் மேலாளர் சுரேஷ், டெக்னீசியன் கணேஷ் பிரபு உள்ளிட்டோர் செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்ய […]
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் மீது தாய்மையின் பொறுப்பை சுமத்துவது கண்ணியத்துடன் வாழ்வதற்கான மனித உரிமையை மறுப்பதாக அமையும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி, தனது கருவை கலைக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அனுமதிக்கப்பட்ட 24 வாரங்களுக்கு அப்பால் இருந்த 25 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலக்க முடியாது என கூறவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தாயார் வழக்கு […]
பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவர்கள் இடைத்தேர்வு எழுதுவதை பள்ளிகளால் தடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கல்வி என்பது “வாழ்வதற்கான உரிமையின் கீழ் உள்ளடங்கிய ஒரு முக்கியமான உரிமையாகும், கட்டணம் செலுத்தாத காரணத்தால் பள்ளிக்குச் செல்வதையோ அல்லது தேர்வு எழுதுவதையோ தடுப்பதன் மூலம் ஒரு குழந்தையை துன்புறுத்த முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் உதவிபெறாத பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர், கட்டணம் செலுத்தாத காரணத்தால் […]
கருக்கலைப்பு விஷயங்களில் ‘இறுதி முடிவு’ ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என கூறி டெல்லி உயர் நீதிமன்றம் திருமணமான பெண்ணை கலைக்க அனுமதித்தது. நீதிபதி பிரதீபா எம். சிங், கரு பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வசதி அல்லது அவர் விருப்பப்பட்ட மருத்துவமனையில் உடனடியாக மருத்துவக் கர்ப்பத்தை கலைத்து கொள்ள அனுமதித்தார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் கருவில் […]
மைனர் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மும்பையில் இளைஞர் ஒருவர் மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காதலியை தனது அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவருடன் வீட்டிற்கு தெரியாமல் உடலுறவு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஏப்ரல் 29 அன்று தனது சகோதரியிடம் வாட்ஸ்அப்பில் தனக்கும், தனது காதலனுக்கும் இடையே […]
திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் அரசு ஊழியர் இறந்து பல ஆண்டுகள் ஆனதால், கருணை […]