சென்னை மாதவரம் பகுதியில் திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாதவரத்தை அடுத்த 200 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டி இருக்கும் லேத் பட்டறை அருகில் கனரக வாகனங்களை நிறுத்துவது வழக்கம். அந்தப் பகுதியில் லாரியை நிறுத்தி இருந்த மணலியைச் சார்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை எடுப்பதற்காக சென்று இருக்கிறார். அப்போது அவரது லாரி அருகே […]
Dead body
விசாகப்பட்டினத்தில் மொழி தெரியாததால் வடமாநிலத்தைச் சார்ந்த ஒருவர் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி உதவி கேட்டு தெரிந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சமுலு மற்றும் ஈது குரு. கணவன் மனைவியான இவர்கள் வேலை தேடி விசாகப்பட்டினம் வந்துள்ளனர். இங்கு வந்த இடத்தில் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் தனது மனைவியை சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறார். இந்நிலையில் […]
சென்னையைச் சார்ந்த சினிமா லைட் மேன் ரத்தகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியைச் சார்ந்தவர் கணேசன். இவர் சினிமாத்துறையில் லைட் மேன் ஆக பணியாற்றி வந்தார் இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் சாலையோரத்தில் வாயில் ரத்தம் வழிந்தபடி உடலின் பல்வேறு பகுதிகளிலும் […]
தர்மபுரி அருகே ஒன்பது மாதங்களுக்கு முன் கோவில் திருவிழாவின் போது காணாமல் போன பிளஸ் டூ மாணவி எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஆரூர் அருகே உள்ள எஸ் அம்மாபாளையம் முள்ளிக்காடு பகுதியைச் சார்ந்தவர் விவசாயி பெருமாள். இவரது மகள் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படித்து வந்தார். பொது தேர்வுகள் முடிந்ததை அடுத்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தனது […]
மலேசியா நாட்டில் சுங்கை பூலோவில் வடக்கு மற்றும் தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வகையில் கிடக்கும் சூட்கேஸ் ஒன்றை பார்த்துள்ளார். அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது அந்த வழிப்போக்கருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துண்டிக்கப்பட்ட நபர் யார் என்ற தகவல்கள் தெரியாத நிலையில், சம்பவ இடத்திலிருந்து காலை 11.45 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
பஞ்சாப் மாநில பகுதியில் உள்ள மோகாவின் பட்டோ ஹிரா சிங் கிராமத்தில் வசிப்பவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், திருமணம் செய்து கொள்வதற்காக அம்ரி கனடா சென்றார். அங்குள்ள சாரேவில் என்ற பகுதியில் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரி திடீரென […]
மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள தானே நகரின் தண்ணீர் தொட்டியில் திங்கள்கிழமை அன்று மிகவும் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பிற்பகல் 2.45 மணியளவில் வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலம் மிதப்பதாக அந்த பகுதியின் பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவரான அவினாஷ் சாவந்த் என்பவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆர்டிஎம்சி குழுவினர்களும் […]
ஆந்திர மாநிலத்தில் பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே அனக்காபள்ளி அடுத்த கொத்த பள்ளம் கிராமத்தில் ஒருவரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட உடல் பாகங்களை பாலத்தின் கீழ் தேங்கி நிற்கும் தண்ணீரில் வீசி விட்டு சென்றுள்ளார்கள். தற்செயலாக அப்பகுதியில் இளைஞர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இளைஞர்கள் தண்ணீரில் உடல் பாகங்கள் மிதப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அந்த உடல் […]
விக்கிரவாண்டியை அடுத்துள்ள லட்சுமிபுரம் தனியார் கல்லூரி பகுதியில் ஒரத்தூர் கிருஷ்ணகுமார் என்பவரது நிலத்தில் 59 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் இதனை குறித்து விக்கிரவாண்டி போலீஸாருக்கு நேற்று காலை தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக்முருகன் எனபவர் சம்பவ இடத்திற்கு சென்று தலை மற்றும் உடலில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினார். அதில், இறந்தவர் விழுப்புரம் வி மருதூர், […]
சென்னை மாவட்ட பகுதியில் உள்ள பட்டாபிராமில் ,3வது தெருவில் விஜயகுமார் வசித்து வந்துள்ளார். அவர் ஓட்டுநராக இருந்தார். விஜயகுமாரின் மனைவி கணவரை பிரிந்து மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார். இதனால் கடந்த மாதம் 28ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து கண்டு வீட்டின் உரிமையாளர் இதனை […]