திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்காரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 2025 – ம் ஆண்டு மே 19 அன்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் […]
death
மத்திய பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி(40). இவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தை கணவர் பரத் ரகசியமாக சில நாட்கள் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து உள்ளது. மனைவி உயிரிழந்ததை வெளியே சொல்லாமல் உடலை வீட்டின் பிரீசரில் கடந்த 3 தினங்களாக வைத்திருக்கிறார் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் பாண்டியன் (23), விஜய்(24) இவர்கள் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் நடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் பணியாற்றி வந்தனர். ஆகவே நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்கள் இருவரும் ரயில் முன்பு செல்பி எடுத்து அனுப்புவதாக சக நண்பர்களிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளனர் திருப்பூர் அணைப்பாளையம் பகுதிக்கு மது பாதையில் வந்த […]
ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய வட்டம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார் எலக்ட்ரீசியன் ஆன இவர் கடந்த 2020 ஆம் வருடம் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. யசோதா ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தனர் அதன் பிறகு யசோதா […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று காற்றாடி பறக்க விட்டதாக தெரிகிறது. அப்போது நூல் எதிர்பாராத விதமாக அருந்து காற்றாடி தனியே பறந்து சென்றுள்ளது. ஆகவே அந்த காற்றாடியை […]
திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20ம் தேடி வயிற்று வலி உண்டானது. இதனை தொடர்ந்து திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அவரது பிரேத பரிசோதனையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் சிறுமி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோரிடம் வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி கர்ப்பமாக […]
தலைநகர் டெல்லியில் இன்று பருவமழை ஆரம்பமாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது இத்தகைய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சாக்ஷி என்பவர் தன்னுடைய உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது. அந்தப் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து செல்ல முயற்சி செய்தபோது அருகில் இருந்த மின்கம்பத்தை அவர் பிடித்ததாக தெரிகிறது இதனால் அதிலிருந்து […]
சென்னை மயிலாப்பூர் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்று இருக்கிறது. இந்த ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் பெரம்பூர் கூக்ஸ் சாலை ஹைதர் கார்டன் பிரதான தெருவை சேர்ந்த அபிஷேக்(28). இவர் நேற்று மதியம் பொருட்களை எடுத்து செல்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டில் ட்ராலியின் பொருட்களை எடுத்துக்கொண்டு 11வது மாறி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய கவன குறைவால் 2 மாடிகளுக்கு […]
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் அர்ஜுனன் இவருடைய மனைவி லட்சுமி இருவரும் விவசாய கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் மகள் பிரகதீஸ்வரி (18) நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று வீட்டின் அருகே இருந்த குளத்தில் பிரகதீஸ்வரி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் […]
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கனகராஜ், அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இருவரும் மீனவர்கள். நேற்று மாலை கனகராஜ், குடிபோதையில் இருந்தார். அந்த வழியாக ஜெயபாலின் மனைவி ஜெயந்தி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கனகராஜ், ஜெயந்தியிடம் தகராறு செய்ததுடன், அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி, தனது கணவர் ஜெயபாலிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், கனகராஜிடம் “ஏன் என் மனைவியை தவறாக பேசினாய்? என்று தட்டிக்கேட்டார். […]