தருமபுரி மாவட்டத்தில் குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளது. மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கோடை காலம்‌ தொடங்கியுள்ளதால்‌, பொதுமக்கள்‌ வெயிலின்‌ தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள்‌ மற்றும்‌ பழச்சாறுகளை அருந்தும்‌ சூழல்‌ காணப்படுகிறது. இதனால்‌, தமிழகம் முழுவதும்‌ சாலையோர மற்றும்‌ குளிர் பானகடைகளில்‌, பரவலாக பொதுமக்களின்‌ நுகர்வு அதிகரித்துள்ளது. இந்ததருணத்தில்‌ சாலையோர மற்றும்‌ நிரந்த […]

தருமபுரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. […]

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம்‌ ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம்‌, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம்‌,மேல்நிலைக்கல்வி (12ம்‌ வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம்‌, பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம்‌ வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு ரூ.600/-ம்‌, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம்‌ பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம்‌ […]

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சாராஸ்‌ மேளா 2023-24-ம்‌ ஆண்டிற்கு மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌ உற்பத்தி செய்யும்‌ பொருட்களை மேற்படி கண்காட்சியில்‌ அனைத்து மாவட்டங்கள்‌ சார்பாக மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌ தங்களின்‌ உற்பத்தி பொருட்களுடன்‌ கலந்து கொண்டு பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக அங்காடிகள்‌ அமைக்கப்பட உள்ளது. மேலும்‌ பெண்களுக்கு மிகவும்‌ பாதுகாப்பாக தங்கும்‌ வசதிகள்‌ மற்றும்‌ கர்காட்சி அரங்கிற்கு செல்ல போக்குவரத்து வசதிகள்‌ […]

வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று மாலைக்குள் சாலை வரியை செலுத்த வேண்டும் என தருமபுரி போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 2023-2024 -ம்‌ நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான சாலை வரி வசூல்‌ சிறப்பு முகாம் மூலம் இன்று மாலை வரை வட்டார போக்குவரத்து அலுவலகம்‌, தருமபுரி மற்றும்‌ இவ்வலுவலக கட்டுப்பாட்டில்‌ இயங்கும்‌ மோட்டார்‌ வாகன ஆய்வாளர்‌ அலுவலகங்கள்‌ அரூர்‌, பாலக்கோடு ஆகிய அலுவலகங்களில்‌ நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்‌ […]

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள ஏரியூர் அருகே சந்தப்பேட்டை வனப்பகுதி ஒன்று இருக்கிறது. அந்த பகுதியில் தலை நசுக்கப்பட்டு பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. இந்த நிலையில் மனப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற நபர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஏரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பெயரில் சடலம் கடந்த இடத்திற்கு வந்த […]

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே கம்மாளம்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவருக்கு சரண்யா என்று மகள் இருக்கின்றார். சரண்யா சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாவது வருடம் படித்து வருகின்றார். கல்லூரி முடிந்த அவர் நேற்று இரவு நேரத்தில் பேருந்தில் இருந்து இறங்கி தன் அண்ணனுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் குடிபோதையில் பத்திருக்கும் அதிகமான இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். சரண்யாவை பார்க்க அந்த போதை ஆசாமிகள் அவரை […]

தர்மபுரி மாவட்டத்தில் வீட்டிலேயே கரு சோதனை மையம் நடத்தி பெண் சிசு கருக்கலைப்பு செய்து வந்த மருத்துவ கும்பலை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் சிசுவிலேயே கண்டறிந்து கொலை செய்யப்படுவது பரவலாக நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பவர்களையும் பெண் சிசுக்களை சட்டவிரோதமாக கொலை செய்பவர்களையும் கண்டறிந்து அவர்களின் […]

ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 75-ஆவது சுதந்திர தின உரையில்‌ மக்களிடையே காணப்படும்‌ இரத்த சோகையை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம்‌ பொதுவிநியோக திட்டம்‌, குழந்தைகள்‌ வளர்ச்சி திட்டம்‌ மற்றும்‌ மதிய உணவு திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்‌ என அறிவித்தார்‌. தருமபுரி மாவட்டத்தில்‌ பொதுவிநியோக திட்டத்தின்‌ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்‌ […]

இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ அனைவருக்கும்‌ வீடுதிட்டத்தின்‌ கீழ்‌, கிராமப்புற மற்றும் நகர்புரங்களில்‌ வறுமைகோட்டிற்கு கீழ்‌ உள்ள மாற்றுத்திறனாளிகள்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி மற்றும்‌ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்‌ மூலம்‌ மானிய விலையில்‌ அடுக்குமாடி குடியிருப்பு மொத்த ஒதுக்கீட்டில்‌ 5% இட ஒதுக்கீட்டின்படி வழங்கிட கீழ்காணும்‌ இடங்களில்‌ அடுக்குமாடி குடியிருப்புகள்‌ கட்டப்பட்டு வருகிறது. எனவே மேற்காணும்‌ பகுதிகளில்‌ வறுமைகோட்டிற்கு கீழ்‌ […]