இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ‌ இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமையானது ‘அனைவருக்கும்‌ இ-சேவை வழங்கும்‌ திட்டத்தின்‌” கீழ்‌ அனைவரும்‌ விண்ணப்பிக்க வலைத்தளம்‌ ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்‌ முகம்‌ இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம்‌ […]

தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்‌ வரும்‌ 20.03.2023 அன்று காலை 9.00 மணி முதல்‌ 4.00 மணிவரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர்‌ சேர்க்கை முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பொதுத்துறை மற்றும்‌ முன்னணி தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்துக்கொண்டு தொழிற்பழகுநர்‌ பயிற்சிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களை தேர்வுசெய்ய உள்ளனர்‌. NCVA/SCVT ஐ.டி.ஐ பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ ஐ.டி.ஐ ல்‌ கடந்த ஆண்டு […]

ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை மூலம்‌ செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டு வரும்‌ வேலைவாய்ப்பில்‌ மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின்‌ அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப்‌ பணிகள்‌ வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில்‌ ஓர்‌ முன்னோடி முயற்சியாகும்‌. இது குறித்து விரிவான அறிவுரைகள்‌ அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌ இத்திட்ட வேலை அட்டை […]

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை2023 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ‌‌. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள்‌ துவங்குதல்‌,அங்கீகாரம்‌ புதுப்பித்தல்‌, தொழிற்பள்ளிகளில்‌ புதிய தொழிற்‌ பிரிவுகள்‌ / தொழிற்‌ பிரிவுகளில்‌ கூடுதல்‌ அலகுகள்‌ துவங்குதல்‌ ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலமாக வரவேற்கப்படுகின்றன. 28.02.2023 நள்ளிரவு 11:59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற […]

தருமபுரி மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌. இதன்‌ […]

தருமபுரி மாவட்டத்தில்‌ இன்று தேசிய குடற்புழு நீக்க நாள்‌ தேசிய அளவில்‌ கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல்‌ 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ அங்கன்வாடி மையங்கள்‌, அரசு பள்ளிகள்‌, அரசு உதவிப்பெறும்‌ பள்ளிகள்‌, தனியார்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌, பாலிடெக்னிக்‌ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும்‌ குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்‌) வழங்கப்படும்‌. தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்‌ 21-02-2023 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும்‌. அன்றைய தினத்தில்‌ […]

தருமபுரி மாவட்டத்தில்‌ கிராமப்‌ பொருளாதாரத்தில்‌ முக்கிய பங்கு வகிக்கும்‌ நாட்டினக்‌ கோழிகளுக்கும்‌ மற்ற கோழிகளுக்கும்‌ கோடைக்‌ காலங்களில்‌ வெள்ளைக்‌ கழிச்சல்‌ நோய்‌ ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது. கோழிகளுக்கு எற்படும்‌ வெள்ளைக் கழிச்சல்‌ நோயினை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ வாரத்திற்கு ஒரு முறை கால்நடைமருந்தகங்களிலும்‌ 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளைநிலையங்களிலும்‌ மற்றும்‌ கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும்‌ கோடைக்காலத்தில்‌ […]

தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யும்‌ பொருட்டு தருமபுரி மாவட்டத்தின்‌ மாதாந்திர தேவை 440 மெட்ரிக்‌ டன்‌ எனவும்‌, இதற்காக ராகி சிறு தானியத்தை சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல்‌ செய்திட தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழகத்திற்கு […]

தருமபுரி மாவட்டத்தில்‌ கிராமப்‌ பொருளாதாரத்தில்‌ முக்கிய பங்கு வகிக்கும்‌ நாட்டினக்‌ கோழிகளுக்கும்‌ மற்ற கோழிகளுக்கும்‌ கோடைக்‌ காலங்களில்‌ வெள்ளைக்‌ கழிச்சல்‌ நோய்‌ ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது. கோழிகளுக்கு எற்படும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோயினை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ வாரத்திற்கு ஒரு முறை கால்நடைமருந்தகங்களிலும்‌ 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளைநிலையங்களிலும்‌ மற்றும்‌ கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும்‌ கோடைக்காலத்தில்‌ வெள்ளைக்கழிச்சல்‌ […]

புருசெல்லோசிஸ்‌ எனும்‌ கன்று வீச்சு நோய்‌ பாக்டீரியா கிருமிகளால்‌ கால்நடைகளுக்கு ஏற்படும்‌ ஒரு நோயாகும்‌. இந்நோய்‌ மாடு, ஆடு போன்ற அசையூட்டும்‌ பிராணிகள்‌, நாய்‌, குதிரைகளிலும்‌ ஏற்படும்‌. ஆடு மற்றும்‌ மாடுகளில்‌ இந்நோய்‌ கன்று வீச்சு, இறந்த நிலையில்‌ கன்று அல்லது குட்டி பிறத்தல்‌, நலிந்த கன்றுகள்‌, நச்சுக்கொடி விழாமல்‌ தங்குதல்‌, பால்‌உற்பத்தி குறைதல்‌ போன்றவற்றை ஏற்படுத்தும்‌. நாட்டின மாடுகளில்‌ கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும்‌ தன்மை கொண்டது. இந்நோய்‌ […]