உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை காட்டுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.. அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்கு  ரூ.365.87 […]

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது என்று அதில் கூறியிருந்தது.. இதுகுறித்து விளக்கம் அளித்த கே.என். […]

காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், தேசிய ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த புகாரை டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த புகார் ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று […]

தமிழ்நாட்டின் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் 41 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. வழக்குப் பதிவு செய்ய சொன்னது அரசு தான்.. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கு […]

சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்குத் தடை கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது. தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் […]

குருகிராமில் நடந்த நில விவகாரம் தொடர்பான ஊழல் வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாத்ரா, சட்டவிரோத முறையில் ரூ.58 கோடி வருமானம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இந்த நிதிகளை ராபர்ட் வாத்ரா சட்டவிரோதமாக பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, இந்த நிதியை வதேரா அசையா சொத்துக்களை வாங்கவும், முதலீடுகளை செய்யவும், கடன்கள் மற்றும் முன்பணங்களை வழங்கவும், அவருடன் தொடர்புடைய குழு நிறுவனங்களின் பாக்கிகளைத் […]

அமலாக்கத்துறை வஞ்சக எண்ணத்துடன் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.. அமலாக்கத்துறையின் (ED)சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள், கைதுகள், சொத்துக்கள் பறிமுதல் ஆகியவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் அமலாக்கத்துறையை கடுமையாக சாடி உள்ளது.. இசிஐஆர் எனப்படும், அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆர், 5000 பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் உங்களால் 10% பேருக்கு மட்டுமே தண்டனை வாங்கி […]

அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். பல முக்கிய ஆவணங்களை நடந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, ஆவணங்கள், லேப்டாப்புகள் போன்ற பல முக்கிய பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விக்ரம் ரவீந்திரனின் அலுவலகங்கள் மற்றும் […]