2026-ல் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் குறைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று குன்னூர் தொகுதியில் பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? இதே […]

மதுரை அருகே அரசு மாணவர் விடுதியில் மாணவர் தாக்கப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு […]

சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுகின்றன.. திரு ஸ்டாலின் அடிக்கடி […]

கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக […]

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போது அனல் பறக்க தொடங்கி உள்ளது.. பிரதான கட்சியான அதிமுக பல அணிகளாக பிரிந்துக் கிடக்கும் நிலையில், அதிமுகவை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார்.. மேலும் கட்சியை ஒருங்கிணைக்கு பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என காலக்கெடுவும் விதித்தார்.. இதனிடையே ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு […]

டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தனது ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாகவும் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்தார்.. மேலும் பேசிய அவர் “ கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டதால் தான் இபிஎஸ் முதல்வரானார்.. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் வேட்பாளர் என பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து […]