தமிழக அரசு தாக்கல் செய்த வேளான் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.. இந்நிலையில், இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. மேலும் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். குறிப்பாக “ ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க […]

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்ப இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பிஎஸ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை சட்டவிரோதமாக அறிவித்துள்ளனர். கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. […]

சிவகங்கை அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி விமான நிலைய தேர்தல் பயணம் செய்த போது உடன் பயணித்த சக பயணி ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக அவதூறாக பேசி முகநூலில் நேரலை செய்தார் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட எதிர்க்கட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை பறித்து கொண்டு சட்டையைப்பிடித்து […]

நேற்றைய தினம் சிவகங்கையில் நடந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரை எடப்பாடி பழனிச்சாமி பி டீமை வைத்து அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார் அவர் பி.டீம் என்று மறைமுகமாக பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கருணாநிதியாலேயே அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. இவரால் என்ன செய்துவிட முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். […]

தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாக தமிழக அரசை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து பேச முயற்சி செய்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் உடனடியாக அவரிடம் இருந்து […]

பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகிய ஐ.டி. விங் நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். பாஜக-வின் ஐ.டி. விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் […]

நம்பிக்கைத் துரோகி எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலுவின்மையில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில், அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் […]

சமீபத்தில் அதிமுக பொதுகுழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ காத்திருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்க வேண்டும் எனவும், பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும் […]

ஈரோடு இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கி இருப்பதால் இன்று கடைசி நாள் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியின் அதிமுக வேட்பாளர்கள் தென்னரசை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது நான் […]

ஜெயலலிதாவின் உயிரிழப்பிற்குப் பிறகு முதல்வரான ஓபிஎஸ் எந்த நிமிடத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தாரோ, அந்த நொடியே அவருக்கு தமிழக அரசியலில் வரவேற்பு குறைய தொடங்கிவிட்டது. அதன் பிறகு தர்மயுத்தம் என்ற பெயரில் அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் ,எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றிணைந்து நான்காண்டு காலம் ஆட்சியை நடத்தி இருந்தாலும் அவருக்கான அரசியல் எதிர்காலம் மங்கியே காணப்பட்டது. இந்த நிலையில் ,எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது […]