கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.. தவெகவினர் அனுமதி வாங்கியது முதல் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. அதே போல் ஆம்புலன்ஸ் ஏன் வந்தது? இரவில் உடற்கூராய்வு ஏன் செய்யப்பட்டது? என பல்வேறு கேள்விகளுக்கும் முதல்வர் விளக்கம் அளித்தார்.. இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் கரூர் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.. […]

கரூர் சம்பவத்தை தொடர்ந்து நான் விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். தலைமையின் அனுமதியை பெற்றே வரவேண்டும் என தவெகவினரிடம் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும், அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. கரூர் சம்பவத்தை […]

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த 1,000 பேர் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி […]

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ மாற்றுக்கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையுமா என்பது எனக்கு தெரியாது.. அது பொதுச்செயலாளரின் முடிவு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேசிய போது தவெக கொடியை காட்டுகின்றனர்.. விஜய்க்காக குரல் கொடுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி தான் தவெக தொண்டர்கள் கூறுகின்றனர்.. தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக தவெக தொண்டர்கள் வருகின்றனர்.. ஆனால் காழ்ப்புணர்ச்சியில் […]

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ பாஜகவுக்கு நன்றி உடன் இருப்பதாக கூறும் பழனிசாமி, 2024 மக்களவை தேர்தலில் எதற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.. பாஜகவுக்கு முக்கியமான தேர்தலான பாராளுமன்ற தேர்தலின் போது எதற்காக கூட்டணியில் வெளியேறினார்.. பாஜக […]

கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு ஏன் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக […]

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் நாளை திருச்செங்கோடு, குமார பாளையம் சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் நாமக்கல், பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் இபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. இந்த நிலையில் இபிஎஸ் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக […]

கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அரூரில் பேசிய அவர்; முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 இடம் வெல்லும் என்று கனவு காண்கிறார். இந்த […]