மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி […]
Flood
பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது . கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர், பெரும்பாலும் ஆற்று வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஏற்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் புனர் மாவட்டத்தில் 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி […]
ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, […]
கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதன்கிழமை மழை சற்று தணிந்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் […]
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் மலை பாங்கான கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வட மேற்கு பஜாவுர் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் […]
ஸ்பெயினில் நேற்று இரவு சுமார் 10.43 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனர். விமான நிலையத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. நிலநடுக்கத்துடன், கனமழை மற்றும் வெள்ளமும் சிக்கலை அதிகரித்துள்ளது. ‘ தி லோக்கல் இஎஸ் ‘ அறிக்கையின்படி , ஸ்பெயினில் உள்ளூர் நேரப்படி காலை 7.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. […]
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் நேபாளம்-சீனா எல்லை பாலம் அடித்து செல்லப்பட்டதில் இருநாடுகளை சேர்ந்தவர்களில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் கிராங்க் துறைமுகம் அருகே, கட்டுமானப் பணி நடந்தது. அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 17 பேர் […]
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கூட்டுறவு வங்கி மூழ்கியுள்ளது. இதனால், அடகு வைக்கப்பட்ட நகைகள், பணம், ஆவணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. […]
ஜூலை 5-ம் தேதி மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்துள்ளார். தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய பெண் ரியோ டாட்சுகி தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தில், பல்வேறு பகீர் கணிப்புகளை செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இப்போது அதிகமான மக்கள் அவரது கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்து […]