டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என […]

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை, பொதுமக்கள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது எப்படி ? என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா அருகே உள்ள கல்லுப்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. நீச்சல் தெரிந்த 4 பேர் ஒத்திகையில் பங்கேற்க அங்கு அழைத்து வரப்பட்டனர். இதில் பினு சோமன் (35) […]

பிலிப்பைன்ஸில் நேற்று பெய்த கனமழை வெள்ளத்தில் சுமார் 46,000 பேர் சிக்கித்தவித்தனர். காலநிலை மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் கடும் வறட்சி, காலம் தவறிய மழை, அதி கனமழை, வெள்ளம் ஆகியன ஏற்படுகின்றன. அதற்கு பிலிப்பைன்ஸும் விதிவிலக்கல்ல.  பிலிப்பைன்ஸில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால், பிலிப்பைன்ஸின் மிண்டானோ தெற்குப் பகுதிகள், ஓசாமிஸ், கிளாரின், உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மார்பளவுக்கு மேல் செல்லும் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. வெள்ள […]

அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் சுபன்சிரி மாவட்டத்தில் சிபுட்டா கிராமத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படியாவது கடந்து சென்றுவிடலாம் என நினைத்த ஓட்டுனர் ஸ்கார்பியோ காரை ஓட்டிச்சென்றார். பாதி தூரம் சென்றதும் அந்த கார் நடுவில் சிக்கிக் கொண்டது. […]