இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மற்றொரு போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், சிறிது நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது. இதை தொடர்ந்து […]
gaza
காசா மீதான இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் வான்வழித் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புகளை தினசரி பெருக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா முழுவதும் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் […]
உலகத்தில் நரகம் எது என்றால் அது காசாதான் என நிச்சயமாக சொல்லிவிடலாம். அப்படி ஒரு பரிதாபமான, மோசமான நிலைக்கு அப்பகுதி தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் காசாவின் கட்டடங்கள் சரிந்து கிடக்கும் நிலையில் அங்குள்ள மக்களுக்கு செல்லும் உணவுகளும் மருந்துகளும் தடுக்கப்பட்டுள்ளன. ஐநா போன்ற அமைப்புகள் தரும் சிறிதளவு உணவுக்காக தட்டை ஏந்தி கிலோ மீட்டர் கணக்கில் அலையும் பரிதாப நிலையில் காசா மக்கள் உள்ளனர். பசியாற உணவு தேடி […]
உணவுக்காக காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் உயிரிழந்தனர். 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பும் தங்களிடம் உள்ள […]
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்வதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, காசா தற்போது எங்களுக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு பெரிய பேச்சுவார்த்தையின் மத்தியில் உள்ளது, ஈரான் உண்மையில் இதில் ஈடுபட்டுள்ளது, மேலும் காசாவுடன் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். பணயக்கைதிகளை […]
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]