இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும், மறுமணம் செய்யும் வரை அவர்களுக்கு முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜாஹிதா கட்டூன் என்ற இஸ்லாமிய பெண் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் முடியும் வரை மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு […]

சென்னை நந்தம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சாலையை, 2009ம் ஆண்டு முதல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, பட்டாபிராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வருவாய் துறை ஆவணங்களில் பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் அங்கு உள்ள மக்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட […]

மனைவியின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி அமெரிக்கா வாழ் இந்தியரான கிரண் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தானும், தன் மனைவியும் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்க குடிமக்களாக உள்ளதாகவும், பிறப்பால் தமது இரு குழந்தைகளும் அமெரிக்க குடிமக்கள் என தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்த மனைவி, அவர்களை […]

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் கண் முன் வருவார். அந்த வகையில் கேரளா மாநிலத்திற்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை பயணத்தில் ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு சரியான வசதிகளை உறுதி செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கொச்சி தேவஸ்தானத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், சபரிமலை சிறப்பு ஆணையர் அவர்களின் மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் விசாரணை செய்த […]

21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது‌. 21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை கலைக்க கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது. MTP சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, 20 முதல் 24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்கும் காரணிகளில் […]