ஹைதராபாத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள் அருந்திய 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் குகட்பள்ளியில் உள்ள ஒரு கடையில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை ​​உட்கொண்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுமார் 15 பேர் ஹைதராபாத்தின் ராம்தேவ் மருத்துவமனையில் குறைந்தது அனுமதிக்கப்பட்டதாக கலால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது. […]

இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்ற போது, நாட்டில் பல மன்னர்கள் இருந்தனர். அந்தத் தருணத்தில், அதிக தங்கம் வைத்திருந்த மன்னர் ஒருவர் இருந்தார். இவரே இந்தியாவின் மிகவும் பணக்கார மன்னர் என்று அரியப்படுகிறார். அவர்தான், ஹைதராபாத் நவாப் மிர்ஜா ஒஸ்மான் அலி கான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்று அழைக்கப்பட்ட ஹைதராபாத்தின் கடைசி நிசாமான மிர் உஸ்மான் அலிகான் சுதந்திர இந்தியாவின் […]

ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமான நிலைய வளாகம் முழுவதும் அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான நிலைய ஊழியர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தெலுங்கானா […]

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் காலமானார். ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.எஸ். ராவ் என்று அழைக்கப்படும் போப்பனா சத்யநாராயண ராவ், ஹைதராபாத்தில் குளியலறையில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 76 வயதான அவருக்கு ஜான்சி லட்சுமி பாய் என்ற மனைவியும், சுஷ்மா மற்றும் சீமா என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரது உடல் […]

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காவல்துறையினரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில், சர்மிளா மீது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கியதாகவும், போலீஸ் கான்ஸ்டபிள் மீது அவரது வாகனத்தை மோதி, காலில் காயம் ஏற்படுத்தியதாகவும், போலீஸ் அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கைது […]

விநாயக் என்பவர் ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் உள்ள இன்ஸ்பயர் வெப்ஸ் என்ற இணையதளம் மூலமாக கோடிக்கணக்கான தனி நபர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி இருக்கின்றார். அதோடு அவற்றை பலருக்கு விற்பனை செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாட்டில் 8 மெட்ரோ நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக திருடி அவற்றை விற்பனையும் செய்துள்ளார். இவரை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் சைபர் […]

சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அறியப்பட்ட பிவி சதீஷ் காலமானார். தெலுங்கானா மாநிலத்தின் ஜஹீராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின் நிறுவனர் பிவி சதீஷ். 77வது வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து […]

தற்காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. உறவு முறைகளை எல்லாம் ஒரு பொருட்டே மதிக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருக்கிறது. தனது மனைவியின் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது ஹைதராபாத் நீதிமன்றம். ஹைதராபாத்தைச் சார்ந்த நபர் […]

ஐதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் யாதவ். 38 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள ஷியாம் யாதவ், பணி முடிந்து தினமும் சக ஊழியர்களுடன் […]

ஹைதராபாத்தைச் சார்ந்த முதுகலை மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி செய்த வழக்கில் அவரது கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கக்காட்டியா மருத்துவக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருபவர் தாராவதி ப்ரீத்தி. இந்த மாணவிக்கு அவருடன் பணிபுரியும் மூத்த மருத்துவர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவருமான டாக்டர் சைப் என்பவர் பணி ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்திருக்கிறார். இதன் காரணமாக மனமுடைந்த […]