அமெரிக்கா தற்போது இந்தியாவின் மீது 25 சதவீத வரியை விதித்துள்ளது, இது (ஆகஸ்ட் 7, 2025 ) நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரியை அதிகரிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க செய்தி சேனலான CNBC-க்கு அளித்த பேட்டியில், மருந்துத் துறை மீது 250% வரி விதிப்பது குறித்து டிரம்ப் எச்சரித்தார். ‘ஆரம்பத்தில் மருந்துகளுக்கு ஒரு சிறிய வரியை விதிப்போம், […]

இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. 2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் […]

நமது வாழ்க்கையில் பொதுவாக எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. ஆனால், பலருக்கும் கடந்த காலத்திற்கு தற்போது சென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அந்தவகையில், பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் தான் பாபா வாங்கா என்ற தீர்க்கதரிசி, தனது கனவில் வரும் நிகழ்வுகளை வரைந்து வெளியுலகிற்கு தெரியப்படுகிறார். பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் உலகளவில் பரவலாக […]

2025 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாடுகளுக்கான பயணத்திற்காக இந்தியா ரூ.67 கோடிக்கும் அதிகமாகவும், 2021 மற்றும் 2024 க்கு இடையில் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.295 கோடிக்கும் அதிகமாகவும் செலவிட்டதாக வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜ்யசபா எம்.பி டெரெக் ஓ’பிரையன் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த புள்ளிவிவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை மற்றும் […]

2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஏழை, பணக்கார மாநிலங்கள் அடங்கிய பட்டியலை மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை (NSDP) கோவா மாநிலம், ரூ.3.57 லட்சமாகப் பதிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் பீகார் ரூ.32,227 உடன் கடைசி இடத்தில் உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன. […]

நாட்டில் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் […]

2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என ஃபிடே (FIDE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட போட்டிக்கான நகரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 2025 உலகக் கோப்பையில் 206 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா கடைசியாக இந்த நிகழ்வை 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்தியது. அப்போது, சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டும், போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற […]