இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 5.58 […]

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பசிபிக் “ரிங்க் ஆஃப் ஃபயர்” பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும் ஒரு பகுதியான சுமத்ரா அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல டெக்டோனிக் தகடுகள் ஒன்றிணைகின்றன. இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இந்தோனேசியா பசிபிக் “ரிங்க் ஆஃப் ஃபயர்” […]

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை 6.3 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. ஏற்கனவே கடும் மழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 25-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சிமியூலு தீவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது, மேலும் சேதம் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” […]