செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஈபிள் கோபுரத்தை விட உயரமான இந்தப் பாலம், ரூ.1,486 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கட்டி முடிக்க 8 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. மேலும் இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். செனாப் ரயில் பாலம் ஆற்றில் இருந்து 359 மீட்டர் […]
jammu kashmir
கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் நேற்று மதியம் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் லடாக் மற்றும் தோடா மாவட்டத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அடுத்த 10 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 4.4 […]
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் கூறியதாவது; இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத […]
11 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது.. 11-ம் வகுப்பின் வரலாற்று புத்தகத்தில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நீக்கி உள்ளது. மேலும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளது.. 10வது அத்தியாயத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான […]
மக்களுக்கு சரியான பாதையை காட்டவே ராமரை அல்லா அனுப்பினார் என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (ஜேகேஎன்என்பி) நிறுவன தினத்தையொட்டி, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கர்னாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், வாக்கு சேகரிப்பதற்காகவே பாஜக ராமரின் பெயரைப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.. […]