கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி படித்து வந்த தஞ்சையைச் சார்ந்த மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்த மாணவர் சுமித்ரன் (20). இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலம்பள்ளம். இவர் இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து இருந்தார். கடந்த சில நாட்களாகவே சுமித்ரன் […]
Kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குழித்துறை பகுதிக்கு அருகே கழுவன்திட்டை ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தில் 60 அடி உயரத்திலிருந்து ஒரு நபர் மது போதையில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து அந்த போதை நபரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை சம்பந்தப்பட்ட விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு ஸ்ட்ரெச்சரில் சுமந்து […]
பெண் குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் விடுத்து வருகின்றனர்.பெண்கள் பாதுகாப்பில் அரசு கவனமாக இருந்து வருவதாக சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு இன்னும் ஒரு சில கொடூர சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் அரசாங்கங்கள் பார்த்தும் பார்க்காததை போல செயல்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.அதே […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குலசேகரத்தின் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்துகொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வந்துள்ளார். இதனை, கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர். அந்த நபரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள கோடியூர் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அனுராஜ் (26). குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் அன்று பிரமாண்ட குடில் அமைப்பது வழக்கம். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 23ம் தேதி கிறிஸ்துமஸ் குடிலை பார்வையிட சென்றுள்ளார். அப்போது அவரது பைக் காட்டாத்துறை பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்தார். நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழா நாளான இன்று(jan-05) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர், பிட்சாடனராக திருவீதி உலா செல்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர்கள் இழுக்கப் படுகின்றன. மாலையில் […]
கன்னியாகுமரி மாவட்டம் அம்பலத்துவிளை பகுதியில் வசித்து வருபவர் ராஜப்பன். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ் (33) என்ற மகன் உள்ளார். அனீஸ் ஃபேஸ்புக்கில் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்ல, அனீசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நான்கு நாட்களுக்கு முன், […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள சித்தாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர். அங்கே தோட்டத்துக்கு வந்த பெண் யானை, தொழிலாளர்களை பயமுறுத்தியது. இதனால் தொழிலாளர்கள் பலரும் பல வழியில் ஓடிய நிலையில், யானை ஞானவதி (50) என்பவரை மட்டும் மிதித்தது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தடுக்க வனத்துறையினர் ஏதாவது செய்திருக்க வேண்டும் என தொழிலாளர்கள் சிலர் […]
கன்னியாகுமரி மாவட்டம் மத்தூர் ஓட்டலிவிளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சமூக நலக்கூடம் உள்ளது. இங்கு நேற்று மாலை நேரத்தில் விருந்து நடந்தது. அங்கு சாப்பிட்டவர்கள் கை கழுவ சென்றனர். இந்த பார்ட்டிக்கு வந்திருந்த சுஜிஜாவும் சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற நிலையில் அந்த இடத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென தரை இடிந்து விழுந்தது. பள்ளத்தில் விழுந்தவரின் தலையில் சிமென்ட் அடுக்குகள் விழுந்தன. இந்நிலையில் சுஜிஜாவை காப்பாற்ற முயன்ற […]
தற்போதைய நிலையை பார்த்தால் பொங்கல் பண்டிகை முடியும் வரையில் கூட மழை பொழிவு இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் மழைபொழிவு சற்றே குறைவாக இருந்தாலும் கூட தென்தமிழகத்தில் மழையின் அளவு சற்று அதிகமாக காணப்படுகிறது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கன்னியாகுமரியை நெருங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக […]