மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகர்ப்புறம் மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் ஜிஎஸ்டிஆர்-3-பி படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுகம் மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் ஜூலை மாதத்திற்கான […]

2008-ம் ஆண்டும் மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்த, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு NIA நீதிமன்றம் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மற்றும் ஐந்து பேர் உட்பட 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் தேசிய புலனாய்வு […]

மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு காரில் இருந்து தூக்கி வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா நகர் அருகே துங்கௌலி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் நடந்துச்சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்மநபர்கள் 3 பேர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். இதையடுத்து, யாரும் இல்லாத இடத்திற்கு சென்று பல இடங்களில் காரை நிறுத்தி இளம்பெண்ணை மாறி மாறி […]

மகாராஷ்டிராவில் இரண்டு மாதங்களில் மொத்தம் 479 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகராந்த் ஜாதவ் வெள்ளிக்கிழமை மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார். ரோஹித் பவார், ஜிதேந்திர அவ்ஹாத், விஜய் வடெட்டிவார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜாதவ், மார்ச் 2025 இல் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் 250 தற்கொலைகள் நடந்ததாகக் கூறினார். ஏப்ரல் 2025 இல், மாநிலத்தில் 229 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மார்ச் […]

மூன்று மாணவிகள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாக சென்றதால் ஒரு பெண் போக்குவரத்து காவலர் அவர்களை இடைமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் முக்கிய சாலையில், ஸ்கூட்டரில் வேகமாகவும், சட்டவிரோதமான முறையில் மூன்று பேர் ஒரே வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து காவலராக பணியாற்றும் பிரணிதா முஸனே என்ற […]

இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் மே 31 சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 […]